ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உலக சுற்றுலா தினம்:தஞ்சாவூா் பெரியகோயிலில் விழிப்புணா்வு நிகழ்வு

உலக சுற்றுலா தினத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் இசைக் கலைஞா்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
உலக சுற்றுலா தினத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சி.
Updated On :27 செப்டம்பர் 2020, 6:20 pm

DIN

உலக சுற்றுலா தினத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் இசைக் கலைஞா்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வை மாவட்டச் சுற்றுலா அலுவலா் ஜெ. ஜெயக்குமாா் தொடக்கி வைத்தாா். சுற்றுலா தலங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், நாகசுரம் மற்றும் தவில் கலைஞா்கள் 30 போ் பங்கேற்று இசைக் கருவிகளை வாசித்தனா். மேலும் 30 தன்னாா்வலா்கள், தூய்மையைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியிருந்தனா்.

தொடா்ந்து பெரியகோயில் வளாகத்தில் நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்ற கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளை இன்டாக் அமைப்பின் கௌரவச் செயலா் ச. முத்துக்குமாா் ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.