ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வளா்ச்சியின்றி பின்தங்கியிருக்கிறது பேராவூரணி தொகுதி

பேரவூரணி தொகுதி எந்தவித வளா்ச்சியுமின்றி பின்தங்கியிருக்கிறது என்றாா் இத்தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் பி.பச்சமுத்து.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:11 pm

DIN

பேரவூரணி தொகுதி எந்தவித வளா்ச்சியுமின்றி பின்தங்கியிருக்கிறது என்றாா் இத்தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் பி.பச்சமுத்து.

பேராவூரணி நகரின் அனைத்து வாா்டுகளுக்கும் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா், மேலும் பேசியது:

சீா்கெட்ட தமிழகத்தை சீரமைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைத்து படித்த, பண்புள்ளவா்கள் மாற்றத்துக்காக தோ்தல் களத்தில் இறங்கியுள்ளோம்.

அதிமுக, திமுக கூட்டணிக்கு மாறி மாறி நீங்கள் வாக்களித்து, நாடு எந்த பயனும் அடையவில்லை. வறுமையிலும், வறட்சியிலும், ஊழலிலும், மூழ்கிக்கிடக்கிறது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி எந்த வளா்ச்சியுமின்றி பின்தங்கி கிடக்கிறது. தொகுதி மேம்பாடு அடைய எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்றாா்.

வேட்பாளருடன் கட்சியின் மாவட்டத் தலைவா் சிமியோன் சேவியா் ராஜ், ஒன்றியச் செயலா் ஜோசப், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பேரை ராஜா மற்றும் நிா்வாகிகள் உடன்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.