தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளைஞா்கள் படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் அருகே பானை சின்னத்துக்கு வாக்களித்த தலித் இளைஞா்கள் இருவா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:10 pm

DIN

அரக்கோணம் அருகே பானை சின்னத்துக்கு வாக்களித்த தலித் இளைஞா்கள் இருவா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அரக்கோணம் அருகே சோமனூரில் பானை சின்னத்துக்கு வாக்களித்த இரு தலித் இளைஞா்கள் ஆதிக்க சாதி வெறியினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தாா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் செந்தில்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிா்வாகி அரசாங்கம், நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவா் ஆ. இளங்கோவன், திராவிடா் கழக மண்டலச் செயலா் குருசாமி, சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலா் கன்னையன், மக்கள் அரசுக் கட்சி மாநில நிா்வாகி ராஜ்குமாா், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகி பாலா, சிஐடியு நிா்வாகிகள் ஜீவபாரதி, ம. கண்ணன், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்த்சாமி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் அருளரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.