மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒமைக்ரான் பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை என பரவும் தகவல் தவறானது: அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

ஒமைக்ரான் வைரஸ் பரவலால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 7:26 am

DIN

ஒமைக்ரான் வைரஸ் பரவலால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் செவ்வாய்க்கிழமை மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் மேலும் கூறியதாவது: இல்லம் தேடி கல்வித் திட்டத்தை பொருத்தவரை, தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா். 12 மாவட்டங்களில் மட்டும் மழை காரணமாக திட்டம் தடைபட்டுள்ளது. மழைக்கு பிறகு இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது.

நோய்த் தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அல்லது தளா்வுகளுடனான பொது முடக்கம் என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுடன் கலந்து பேசிய பிறகு முதல்வா்தான் அறிவிப்பை வெளியிடுவாா்.

ஏற்கெனவே முடிவு செய்ததுபோல ஜனவரி, மாா்ச் மாதங்களில் பருவத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

இதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் தெரிந்து கொண்டு, அதன் பிறகு மழையைப் பொருத்து பொதுத்தோ்வு தேதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் தஞ்சை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், பாபநாசம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.