விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முதல்வருடனான கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

ஒமைக்ரான் தொடர்பாக வருகிற பொதுமுடக்கத் தளர்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

News image

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)

Updated On :5 டிசம்பர் 2021, 2:08 pm

ஒமைக்ரான் தொடர்பாக வருகிற பொதுமுடக்கத் தளர்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஒமைக்ரான் வரத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: ஒமைக்ரான் தொடர்பாக பொது சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை. பொதுவாக பொதுமுடக்கத் தளர்வை அமல்படுத்தும்போது மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். 

அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,621 மையங்கள் தேவைப்படுகின்றன. இதில், 1,821 மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படுகிறது. மாவட்டம் முழுவதும் விரைவில் அமைக்கப்பட்டுவிடும். இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். 12 மாவட்டங்களிலும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து மையங்களும் அமைக்கப்படும். 

மாநிலம் முழுவதும் ஜனவரி மாதத்திலிருந்து முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றார். அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.