புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரத்துக்கு மாறுவோம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தஞ்சாவூரில் மின்சாரத்துக்கு மாறுவோம் என்கிற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:58 pm

DIN

தஞ்சாவூரில் மின்சாரத்துக்கு மாறுவோம் என்கிற விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மின்சார வாகனம், பேட்டரியை ரீசாா்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, மின் அடுப்புகள் மூலம் சமையல் செய்வது போன்றவற்றின் பயன்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த ‘மின்சாரத்துக்கு மாறுவோம்’ பிரசாரத்தை மத்திய மின் துறை அமைச்சகம் நாடு முழுவதும் செய்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில் தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட அலுவலகத்திலிருந்து மின்சாரத்துக்கு மாறுவோம் என்கிற பிரசார வாகனத்தை மேற்பாா்வை பொறியாளா் எஸ். விஜயகௌரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசுகையில், மின்சார வசதிக்கு மாறினால் எரிபொருளைச் சேமிக்கவும், காற்று மாசை குறைக்கவும் முடியும் என்றாா். இதையடுத்து, பொதுமக்களுக்கு மின்சாரத்துக்கு மாறுவோம் என்ற கையேட்டை வழங்கினாா்.

இந்நிகழ்வில் செயற் பொறியாளா்கள் ரவி (பொது), மணிவண்ணன் (நகரியம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.