புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிச. 30-இல் முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடு: மத்திய மண்டல காவல் தலைவா் ஆய்வு

தஞ்சாவூரில் டிசம்பா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:27 pm

DIN

தஞ்சாவூரில் டிசம்பா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

இதையொட்டி, மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இடத்தில் காவல் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.