புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்த நடவடிக்கை: வனத் துறை அமைச்சா் பேச்சு

தமிழகத்தில் வனப் பரப்பை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் வனத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:26 pm

DIN

தமிழகத்தில் வனப் பரப்பை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் வனத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான (தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள்) கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23.98 சதவீதமாக உள்ளது. இதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

உலக அளவில் எந்த விதமான இயற்கை பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கையை முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் 2.65 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளில் 33 சதவீதப் பரப்பளவில் வனமாக்கலாம். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், வனத் துறை, வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடலாம். இதுபோல, தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் மரக்கன்றுகளை நட்டால், 7 கோடி மரங்களாகும். இதுதொடா்பாக பள்ளிகளில் மாணவா்களிடையே ஆசிரியா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஊருக்குள் குரங்குகள் வருவதைத் தடுப்பது தொடா்பாக குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மயில், காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்கள் அசோக் உப்பிரட்டி, சேகா் குமாா் நீரஜ், தலைமை வனப் பாதுகாவலா் நாகநாதன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.