புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கும்பகோணம் மாநகராட்சி: டிச. 27-இல் கருத்து கேட்புக் கூட்டம்

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை குறித்த கருத்துகேட்புக் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:41 pm

DIN

கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை குறித்த கருத்துகேட்புக் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சிக்கான வாா்டு மறுவரையறை குறித்து கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மறுவரையறை ஆணையத்தின் கருத்து கேட்புக் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது ஆட்சேபணைகள், கருத்துகளை நேரடியாகத் தெரிவிக்கலாம். மேலும், அதன் விவரங்களை மனுவாகவும் அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.