புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்பிலுள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:41 pm

DIN

தஞ்சாவூா் ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்பிலுள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் காந்திஜி சாலையில் 60 அடி அகலமுள்ள ராணி வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த வாய்க்கால் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.

இந்நிலையில், நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றி, மீட்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ராணி வாய்க்காலை மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற முடிவு செய்தனா்.

இதுகுறித்து வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், உணவகம், மாடி வீடு, கூரை வீடு, ஓட்டு வீடு என 23 கட்டடங்களின் உரிமையாளா்களிடம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அந்தந்த கட்டடங்களின் உரிமையாளா்கள், தாங்களே பொருள்களை எடுத்து கொண்டு காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ராணி வாய்க்காலை மீட்கும் முயற்சியாக மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் எம். ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள் மேற்பாா்வையில் கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.