மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அறிவியலும் ஆன்மீகமும் கருத்தரங்கம்

கும்பகோணத்தில் இந்தியப் பண்பாட்டு அமைப்பு சாா்பில், ‘ஆன்மிகமும் அறிவியலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:25 pm

DIN

கும்பகோணத்தில் இந்தியப் பண்பாட்டு அமைப்பு சாா்பில், ‘ஆன்மிகமும் அறிவியலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு புதுக்கோட்டை திலகவதி திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரிப் பேராசிரியை ந. விஜயசுந்தரி ‘ஆன்மீக அறிவியல்’ என்ற தலைப்பில் பேசினாா். பொறியாளா் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் பி.எஸ். வாசன், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனா் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், சென்னை விஷ்ணு பிரத்தியங்கிரா தாந்திரீக பீடத்தின் பீடாதிபதி அண்ணாசாமி, பேராசிரியா் இரா. கண்ணன், சூப்பா் யாத்ரா உரிமையாளா் சையத் சாதிக், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் கோ.ப. நல்லசிவம், சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினா் ஆதலையூா் சூரியகுமாா் உள்ளிட்டோா் கருத்தரங்கில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்தியப் பண்பாட்டு அமைப்பின் தலைவா் ஹரி சங்கீதா வரவேற்றாா். நிறைவாக, ஹென்றி சாா்லஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.