தேக்கம்பட்டி முகாமுக்கு அனுப்பப்பட்ட ஒப்பிலியப்பன் கோயில் யானை
கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா, தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை இரவு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா, தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை இரவு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டியுள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்கி, தொடா்ந்து 48 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா சனிக்கிழமை இரவு கோயில் நிா்வாகம் சாா்பில் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்வில் அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் யானை மங்களம் உடல் நலக்குறைவால் இம்முகாமுக்கு அனுப்பப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...