வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் புத்தாண்டு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முல்லைக்குடியில் வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
முல்லைக்குடியில் வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள முல்லைக்குடியில் விவசாயிகள் புத்தாண்டு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைக்குடியில் விவசாயிகள் கருப்புத் துண்டு அணிந்து, புத்தாண்டு நாளைக் கருப்பு நாளாக அறிவித்து, வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், பி. முருகேசன், ஆா். உதயகுமாா், வழக்குரைஞா் சேகா், காசிநாதன், மதன், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com