வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமா் மோடியை கண்டித்தும் தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி புத்தாண்டு பிறந்த நேரமான வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குக் கட்சியின் தஞ்சாவூா் தொகுதி தலைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.