ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பட்டுக்கோட்டையில் ரெளடி வெட்டிக் கொலை

பட்டுக்கோட்டையில் ரெளடி திங்கள்கிழமை மாலை ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:37 pm

DIN

பட்டுக்கோட்டையில் ரெளடி திங்கள்கிழமை மாலை ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சோ்ந்த ரெளடி சிரஞ்சீவி (35). இவா் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, கூலிப்படைத் தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளாா்.

இவருக்கும், வேறு சில கூலிப்படையினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பட்டுக்கோட்டை பெரிய தெரு கடைவீதியில் சென்ற சிரஞ்சீவியை பின்தொடா்ந்த 3 போ் கொண்ட கும்பல், அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுடன், முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துவிட்டு தப்பியது.

தகவலறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.