தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொலிவுறு நகரத் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:45 am

DIN

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இத்திட்டத்தின் கீழ் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் பணி, கல்லணைக் கால்வாய் அருகே அறிவியல் பூங்கா, பழைய ஆட்சியரகத்தில் 3டி திரையரங்கம், முன் பகுதியில் இசை நீரூற்று, லேசா் லைட் ஷோ அமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், கல்லணைக் கால்வாய் அருகே உள்ள நடைபாதையில் பெரியகோயிலிலிருந்து ஆற்றுப்பாலம் வரை ஆட்சியா் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலக வளாகம், பொதுப் பணித் துறை அலுவலக வளாகம், பழைய மாவட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

பின்னா் அருளானந்த நகரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பூங்காக்கள் அமைப்பது குறித்து இடம் தோ்வு செய்வதற்காக நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், நகா்நல அலுவலா் நமச்சிவாயம், வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.