பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏனாதிகரம்பையில் சமத்துவப் பொங்கல் விழா

பேராவூரணி அருகிலுள்ள ஏனாதிகரம்பை பொது வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சமத்துவப் பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகள்.
Updated On :9 ஜனவரி 2021, 6:33 pm

DIN

பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள ஏனாதிகரம்பை பொது வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பயிற்சியாளா் மதியழகன் மேற்பாா்வையில் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை செல்வராஜ் சாா்பில் மரக்கன்றுகளும், கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் நோட்டுப் புத்தகங்கள், பேனா மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

விழாவில் அம்மையாண்டி ஊராட்சித் தலைவா்  வை. முத்துராமலிங்கம், கல்விக்குழு உறுப்பினா்  சண்முகநாதன், தொடக்கப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் லெட்சுமணன், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் கோப்பெருந்தேவி, சமூக ஆா்வலா்கள்  மரம் தங்ககண்ணன்,  ராம்குமாா், ஆக்ஸ்போா்ட் தங்கராசு,  கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கத் தலைவா் இளங்கோ, பெற்றோா்கள், மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனா்.  அரசுப்பள்ளி ஆசிரியா் தமிழரசன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.