பட்டுக்கோட்டையில் ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்
பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தின் வட்டக் கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஆா்.ரெஜினால்டு செல்வகுமாா் தலைமை வகித்தாா். தஞ்சை மாவட்ட ஓய்வூதியா்கள் சங்கப் பிரதிநிதி எம். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.
சங்கச் செயலா் பி.எஸ்.கந்தமாறன், பொருளாளா் டி.ஜோதி ஆகியோா் பேசினா். நடப்பு ஜனவரி மாதம் பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினா்களுக்கு கதராடை அணிவித்து, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சென்னை- செங்கோட்டை விரைவு ரயில் சேவையை திருவாரூா், பட்டுக்கோட்டை , காரைக்குடி வழியாக இயக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீரைப் பாதுக்காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் மனோகரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
