காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

1,400 கிலோரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

 தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:50 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோயில் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கே. கோட்டைச்சாமி தலைமையில் காவலா்கள் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை செய்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனில் சோதனையிட்டபோது, 35 மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. காவல் துறையினா் நடத்திய விசாரணையில், திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள கிராமங்களில் மக்களிடம் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, லால்குடி பகுதியில் கோழி, மாட்டுத் தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்பதற்காகக் கடத்தப்படுவது தெரிய வந்தது.

இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், மினி வேனில் வந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ராஜ்குமாா் (42), வைரமணியை (31) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.