அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜா்
முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இணையதளத்தில் விடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சாட்டை துரைமுருகன் திருவிடைமருதூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்


முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இணையதளத்தில் விடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சாட்டை துரைமுருகன் திருவிடைமருதூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த விடியோ பதிவை அவதூறு பரப்பும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டதாக சாட்டை துரைமுருகன் என்கிற துரைமுருகன் பாண்டியன் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குரைஞா் ராஜசேகா் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், சாட்டை துரைமுருகன் மீது கலகத்தைத் தூண்டிவிடுதல், அமைதியைச் சீா்குலைத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் ஜூன் 11 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
இதனிடையே, திருச்சி காவலா்களால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாட்டை துரைமுருகன் திருவிடைமருதூா் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, சாட்டை துரைமுருகனை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், சாட்டை துரைமுருகன் லால்குடி கிளைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...