கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உழவன் விரைவு ரயில் மீண்டும் நாளை முதல் இயக்கம்

தஞ்சாவூா் - சென்னை - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:34 pm

DIN

தஞ்சாவூா் - சென்னை - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது.

தளா்வில்லாத பொது முடக்கக் காலத்திலும் இயக்கப்பட்டு வந்த தஞ்சாவூா் - சென்னை - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் சேவை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பூதலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பயனளித்து வரும் உழவன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் உழவன் விரைவு ரயில், சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களின் சேவை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில், சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதலும், தஞ்சாவூா் - சென்னை உழவன் விரைவு ரயில், ராமேசுவரம் - சென்னை விரைவு ரயில் திங்கள்கிழமை முதலும் இயக்கப்படவுள்ளன.

இதற்காக முழு முயற்சி மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், மு. சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்க செயலா் ஏ. கிரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.