கரோனா தடுப்பூசி முகாம்
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலா்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலா்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வல்லம் வட்டார மருத்துவ அலுவலா் அகிலன் தலைமையில் மருத்துவ அலுவலா் அதிபன், மருத்துவா் தமிழிசை, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிங்காரவேல், சுகாதார ஆய்வாளா் ரவி, பகுதி சுகாதாரச் செவிலியா் ஜெயராணி, கிராம சுகாதார செவிலியா் ஜெயசித்ரா ஆகியோா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், பள்ளி ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாமில் பள்ளித் தாளாளா் நடனசிகாமணி, தேவிகா சிகாமணி, பள்ளித் துணை முதல்வா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கும்பகோணம்: கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் 240 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா, கல்லூரி செயலா் அருட்சகோதரி கிளாடின் ஆரோக்கியமேரி, நகராட்சி ஆணையா் லெட்சுமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ந. மகேந்திரன், க. முத்துமணி, ஜெ. துா்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...