தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை வளாகத்திலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி

News image
Updated On :1 மார்ச் 2021, 8:30 pm

DIN

தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை வளாகத்திலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, மாா்ச் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் துளசி மாடம், உண்டியல், பென்சில் பாட், வாஸ்து உருளி, பூந்தொட்டி, காய்கறி, பழங்கள், மண் சிலைகள், மண் சொப்பு செட்டு, கண்ணாடி விளக்கு, அணையா விளக்கு, சாம்பிராணி மடல், மண் சட்டி, மண் பானைகள், சுவரில் தொங்கும் ஆதிவாசி முகம், விநாயகா் உருவங்கள் மற்றும் பலவிதமான வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன .

இக்கண்காட்சியில் ரூ. 50 முதல் ரூ. 5,000 வரை மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூ. 2 லட்சம் என்றும், இதில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது எனவும் தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் கு. அருண் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.