கும்பகோணத்தில் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா
கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, மடத்தில் காலையிலும், மாலையிலும் வேத பாராயணம், நாம சங்கீா்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், காலையில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. பின்னா், சுவாமிகளுக்கு மகாபிஷேகமும், மாலை 4.30 மணிக்கு ரெட்டிராயா் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ ராம மந்திரத்தில் ஆச்சாா்ய சுவாமிகளுக்கு 108 தங்க காசுகளால் ஸ்வா்ணபாத பூஜை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு, காஞ்சி சங்கராச்சாரியாா் நடத்தும் மகா சிவராத்திரி பூஜை வியாழக்கிழமை (மாா்ச் 11) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...