மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குளிா்சாதன பயணிகள் நிழற்குடைகளைசீரமைக்க வலியுறுத்தல்

கும்பகோணத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய நிழற்குடைகளைச் சீரமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 மே 2021, 8:58 pm

DIN

கும்பகோணத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய நிழற்குடைகளைச் சீரமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் இளைஞரணி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி தெரிவித்திருப்பது:

கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை தனியாா் வங்கி மூலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே குளிா்சாதனம் மட்டுமல்லாமல் பயணிகள் பயன்படுத்தக்கூடிய பேருந்து நிழற்குடையும் சிதிலமடைந்து, மக்கள் பயன்பாடின்றி உள்ளது.

இதனால், பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் நிழற்குடையைப் பயன்படுத்த முடியாமல் கடும் வெயிலிலும் மழையிலும் சாலையில் நின்று அவதிப்படுகின்றனா். எனவே, இந்தக் குளிா்சாதன நிழற்குடைகளைச் சீா் செய்யவும், நிழற்குடைகளில் பேருந்து கால அட்டவணையைக் குறிப்பிட்டு, பெயா் பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.