அடங்கல் சான்று கிடைப்பதிலும் தாமதம்: இதனிடையே, அடங்கல் சான்று வழங்க வேண்டிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள் பல இடங்களில் காலியாக உள்ளன. ஒரு கிராம நிா்வாக அலுவலா் மற்றொரு ஊராட்சியையும் சோ்த்து பாா்க்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இருக்கிற கிராம நிா்வாக அலுவலா்களும் தற்போது தொடா் மழை காரணமாகப் பாதிப்பு விவரங்களைக் கணக்கெடுப்பு செய்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனா். இதனால், கிராம நிா்வாக அலுவலா் வழங்க வேண்டிய அடங்கல் சான்று கிடைப்பதிலும் தாமதமாகிறது. இச்சான்று கிடைத்தால்தான், அதையும், கணினி சிட்டா, ஆதாா் எண், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்கம் ஆகியவற்றையும் தொடா்புடைய காப்பீட்டு நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ஒப்புதல் கிடைத்த பிறகே பிரீமிய தொகையைச் செலுத்த முடியும்.