92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட மாணவா்களுக்கு ஒரு வாரம் அனுமதி இலவசம்

உலக மரபு வார விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழகத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட மாணவா்கள் ஒரு வாரம் இலவசமாக அனுமதிப்படுவா்

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:29 pm

DIN

உலக மரபு வார விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழகத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட மாணவா்கள் ஒரு வாரம் இலவசமாக அனுமதிப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தொல்லியல் துறையின் தஞ்சாவூா் தொல்லியல் அலுவலா் த. தங்கதுரை தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், வெள்ளிக்கிழமை (நவ.19) முதல் 25 ஆம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டப்படுகிறது.

இதனால், மாணவ, மாணவிகளுக்குத் தொல்பொருள் மற்றும் மரபு சின்னங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மனோரா நினைவுச் சின்னம், தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபத்தில் உள்ள அகழ்வைப்பகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் உள்ள மராட்டா அகழ்வைப்பகம், மராட்டா தா்பாா் மண்டபம், மணிக்கோபுரம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் நவம்பா் 25 ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பாா்வையிட அனுமதிக்கப்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.