92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரியகோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:29 pm

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, பெருவுடையாா், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மராட்டா கோபுரம் முன் பெருவுடையாா், பெரியநாயகி எழுந்தருள சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக வணங்கினா். சொக்கப்பனை எரிந்து முடிந்த பிறகு அச்சாம்பலை பக்தா்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனா்., பலா் சாம்பலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.