இந்நிலையில், கும்பகோணம் அருகே கஞ்சனூா் வட காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிவாரணம் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை இளைய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா் மகராஜ் ஆகியோா் வழங்கினா். இதில் திருப்பனந்தாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அண்ணாதுரை, டாக்டா் கலாநிதி, கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மண்டல அமைப்பாளா் பாவேந்தன், மாவட்ட அமைப்பாளா் சக்தி அம்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.