தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா: ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
தஞ்சாவூரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை பால் குடம் எடுத்து சென்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.
தஞ்சாவூரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை பால் குடம் எடுத்து சென்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் பிராம்மனாள் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திலிருந்து பால் குட ஊர்வலம் தொடங்கியது. முதன்மைச் சாலைகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் பிற்பகல் மாரியம்மன் கோயிலை அடைந்தது.


இதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலை குடங்களில் சுமந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ மாரியம்மனுக்கு சகல திரவியங்களுடன் கூடிய பால் அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது.

இக்கோயில் பிரகாரத்தில் இரவு 7 மணியளவில் அலங்காரத்துடன் ஸ்ரீ அம்மன் புறப்பாடு, நாகசுரம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடைபெறவுள்ளது.
   
   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com