தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் பிராம்மனாள் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திலிருந்து பால் குட ஊர்வலம் தொடங்கியது. முதன்மைச் சாலைகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் பிற்பகல் மாரியம்மன் கோயிலை அடைந்தது.
இதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலை குடங்களில் சுமந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ மாரியம்மனுக்கு சகல திரவியங்களுடன் கூடிய பால் அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது.
இக்கோயில் பிரகாரத்தில் இரவு 7 மணியளவில் அலங்காரத்துடன் ஸ்ரீ அம்மன் புறப்பாடு, நாகசுரம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடைபெறவுள்ளது.