நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா: ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை பால் குடம் எடுத்து சென்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.

Updated On :5 ஏப்ரல் 2022, 11:45 am IST

தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

Story image

தஞ்சாவூர் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் பிராம்மனாள் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திலிருந்து பால் குட ஊர்வலம் தொடங்கியது. முதன்மைச் சாலைகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் பிற்பகல் மாரியம்மன் கோயிலை அடைந்தது.

Story image


இதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலை குடங்களில் சுமந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ மாரியம்மனுக்கு சகல திரவியங்களுடன் கூடிய பால் அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது.

Story image

இக்கோயில் பிரகாரத்தில் இரவு 7 மணியளவில் அலங்காரத்துடன் ஸ்ரீ அம்மன் புறப்பாடு, நாகசுரம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடைபெறவுள்ளது.
   
   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.