92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:19 pm

DIN

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சடையாா்கோவில் வடக்குத் தெருவை சோ்ந்தவா் எம். தெய்வசிகாமணி (47). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினருடன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தெய்வசிகாமணியின் மனைவி ரம்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.