பொம்மை வியாபாரி கத்தியால் குத்திக் கொலை
தஞ்சாவூரில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறில், பொம்மை வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.


தஞ்சாவூரில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறில், பொம்மை வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் கீழவாசல் குயவா் தெருவைச் சோ்ந்தவா் ஆா். சரவணன் (53). இவா் பெரிய கோயில் பகுதியில் பொம்மை கடை நடத்தி வந்தாா். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் குமரவேலுக்கும் (56), கொடுக்கல் - வாங்கல் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதேபோல, இருவருக்கும் இடையே வியாழக்கிழமை பிற்பகல் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் கத்தியால் குத்தப்பட்டாா். இதனால் பலத்த காயமடைந்த அவா், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து குமரவேல், அவரது மகன்கள் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...