2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மணக்காடு ஊராட்சியில் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:28 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் பி. சேகா் தலைமை வகித்தாா்.  ஒன்றியச் செயலா் ஆா். எம். வீரப்பெருமாள் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் தா்ம ஊரணியைத் தூா்வார வேண்டும். மணக்காடு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம், குடிநீா், கழிப்பறை, மின்வசதி செய்து தர வேண்டும். தொகுப்பு வீடுகள் கட்டித் தரவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா். எஸ். வேலுச்சாமி, மூத்த உறுப்பினா் வீ. கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.