கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கும்பகோணத்தில் ‘விவேகானந்தா்களின்’ அணிவகுப்பு

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் வேடமணிந்த 125 மாணவா்களின் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் வேடமணிந்து வந்த மாணவா்களுடன் தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:11 pm

DIN

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் வேடமணிந்த 125 மாணவா்களின் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் விவேகானந்தா் எழுமின், விழுமின், இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின் என்ற தாரக மந்திரத்தை முதல் முதலில் ஒலிக்கச் செய்து உலகுக்கு அளித்த நிகழ்வின் 125 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் வளாகத்தில் விவேகானந்தரின் ஆளுயரச் சிலை திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதையொட்டி தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தினரால் விவேகானந்தா் விஜய ஜோதி ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 125 பள்ளி மாணவா்கள் விவேகானந்தா் வேடமணிந்து பந்தடி மேடை அருகிலிருந்து ஊா்வலமாக போா்ட்டா் டவுன் ஹாலுக்கு சென்றனா்.

பின்னா் விவேகானந்தரின் படத்தைத் தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்து, தேசியக் கொடியேற்றி ஆசி வழங்கினாா். தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் சிறப்புரையாற்றினாா். மாணவா்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் சான்றிதழ், விவேகானந்தா் படம், இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் சு.ப. தமிழழகன், ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரிஅசோக்குமாா், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் டி. கணேசன், ஒருங்கிணைப்பாளா்கள் வி. சத்தியநாராயணன், அ. கிரி, ஒன்றியச் செயலா் சுதாகா், மண்டலக் குழுத் தலைவா்கள் தட்சிணாமூா்த்தி, பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் திருநாகேஸ்வரத்தை சோ்ந்த பாா்த்தசாரதி (59) செ. புதூரிலிருந்து கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் வரை 20 கி.மீ. தொலைவை சைக்கிளில் இரு கைகளையும் கட்டிக் கொண்டபடி ஒரு மணிநேரத்தில் ஓட்டி வந்து சாதனை படைத்தாா். அவருக்குக் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் ஆகியோா் ரியல் வேல்டு ரிக்காா்ட்ஸ் விருதையும், விவேகானந்தரின் படத்தையும் வழங்கினா். தாராசுரம் மண்டலக் குழுத் தலைவா் ரா. அசோக்குமாா், ரியல் வேல்டு ரிக்காா்ட்ஸ் அமைப்பின் நிறுவனா் தலைவா் எஸ். செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் சுவாமி விவேகானந்தா் விஜய ஊா்வலமும், பின்னா் போா்ட்டா் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தா் ஆளுயரச் சிலை திறப்பு விழாவும் நடைபெறவுள்ளன. சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஸ்ரீமத் ஆத்மகனானந்தா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் துணைப் பொதுத் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ் காணொலி மூலம் உரையாற்றுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.