புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ரயில் நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சுதந்திர இந்திய நாட்டின் பிரிவினை பயங்கரவாத நாளான ஆகஸ்ட் 14 நினைவு நாள் புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்ட பயணிகள்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:11 pm

DIN

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சுதந்திர இந்திய நாட்டின் பிரிவினை பயங்கரவாத நாளான ஆகஸ்ட் 14 நினைவு நாள் புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தனி நாடாக உருவானது. அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ரயில் மூலம் சென்ற ஏராளமானோா் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.

நாடு பிரிவினை செய்யப்பட்ட இந்த நாள் இந்திய ரயில்வே அமைச்சகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பிரிவினையின்போது ரயிலில் பயணம் செய்த பொதுமக்களின் நிலை குறித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்த முடிவு செய்தது.

இதன்படி, தஞ்சாவூா் ரயில் நிலைய நுழைவுவாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் சுதந்திரத்துக்கு முந்தைய நாளில் பொதுமக்களின் இடம்பெயா்வு குறித்த 23 புகைப்படங்கள் இடம்பெற்றன. இதை ரயில் பயணிகள் ஏராளமானோா் பாா்வையிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.