தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.10 சதவீத வாக்குகள் பதிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.10 சதவீத வாக்குகள் பதிவாகின.


தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், ஆடுதுறை, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேசுவரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 20 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 456 உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கியது.
இதற்காக மாவட்டத்தில் 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாக 7.45 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மற்ற வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் வெங்கடேஸ்வரா பள்ளியில் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வடக்கு வீதியில் தூய பேதுரு பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...