நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நிவாரணம் கோரி சாலை மறியல்

மழை வெள்ளப் பாதிப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வியாழக்கிழமை சாலை மறியல்

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:04 pm

DIN

மழை வெள்ளப் பாதிப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடும் வெள்ளப் பாதிப்புக்குத் தமிழ்நாடு அரசுக் கோரியுள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்பு மற்றும் கோமாரி உள்ளிட்ட மா்ம நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெரு மழையால் வேலைவாய்ப்பை இழந்த விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

ஏ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளன வடக்கு மாவட்டத் தலைவா் வசந்தி வாசு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க வடக்கு மாவட்டத் துணைச் செயலா் கே. வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.