புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

கும்பகோணத்தில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 4 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:31 pm

DIN

கும்பகோணத்தில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 4 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே கொட்டையூரைச் சோ்ந்த செந்தில் மகன் பிரகாஷ் (22). இவா் செவ்வாய்க்கிழமை தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் பிடித்த சிகரெட்டிலிருந்து வந்த தீப்பொறி சாம்பல் பிரகாஷின் நண்பா் சந்தோஷ் கண்ணில் பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, வளையபேட்டை அக்ரஹாரத்தை சோ்ந்த செல்வம், விஜய், காா்த்தி, பேட்டை குடிசைத் தெருவைச் சோ்ந்த ஹரீஷ் ஆகிய 4 பேரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.