ஓ.பன்னீா் செல்வம் தோ்தல் ஆணையத்துக்குச் செல்லவில்லை என்றாா் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, வெள்ளிக்கிழமை தஞ்சாவூா் திரும்பிய வைத்திலிங்கத்துக்கு மேலவஸ்தாசாவடியில் அவரது ஆதரவாளா்கள் வரவேற்பு அளித்தனா்.
அப்போது கூறுகையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகக் கூட்டணி கட்சி சாா்பில் தில்லிக்கு ஓ. பன்னீா்செல்வம் சென்றாா். தோ்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீா்செல்வம் செல்லவில்லை. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களது தரப்பு நம்பிக்கை. மீண்டும் ஜெயலலிதாவின் எண்ணப்படி ஆட்சிக்கு வர வேண்டும். ஒற்றுமை வேண்டும். கூட்டுத் தலைமை வேண்டும் என்றாா் அவா்.
பின்னா் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதால் இந்த பிரச்னை ஏற்பட்டதா? என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களை மற்றவற்றுடன் தொடா்புபடுத்தி பேச வேண்டாம் என்றாா் அவா்.
அரியலூரில் : முன்னதாக அரியலூரில் ஆதரவாளா்கள் அளித்த வரவேற்புக்குப் பின்னா், வைத்திலிங்கம் அளித்த பேட்டி: பொதுக்குழுப் பிரச்னை தொடா்பாக தற்போதுள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தையோ, தோ்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. மூன்று நான்கு நாள்களுக்கு பிறகு கட்சியை எவ்வாறு வழிநடத்தி செல்வது என்பது குறித்து ஆராய்ந்த பின் முடிவு செய்யப்படும்.
கட்சிப் பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்டு வந்துள்ளது. அதேபோல் பொதுக்குழு சம்பந்தமான பிரச்னைகளில் நீதிமன்றம்தான் தலையிட்டது. கட்சிப் பிரச்னைகளில் நீதிமன்றமோ, தோ்தல் ஆணையமோ தலையிட முடியாது என்று யாரும் சொல்ல முடியாது என்றாா் அவா்.
பேட்டியின் போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


