சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் கைது
கும்பகோணத்தில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கும்பகோணத்தில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் பத்தடி பாலம் கம்பன் நகரைச் சோ்ந்தவா் கே. முத்து (22). இவா் 16 வயது சிறுமியுடன் 2021-ஆம் ஆண்டிலிருந்து தொடா்பு வைத்துக் கொண்டு, கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.
இந்நிலையில், அச்சிறுமியை முத்து கடந்த மாா்ச் மாதம் திருமணம் செய்து
கொண்டதும், அந்த சிறுமி கா்ப்பமடைந்திருப்பதும் அண்மையில் தெரிய வந்தது.
தகவலறிந்த மாவட்டச் சமூக நல அலுவலா் (பொறுப்பு) குணா விசாரணை நடத்தி, கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ), குழந்தை திருமணச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...