திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டெல்டா மாவட்டங்களில் முழுவீச்சில் தூர்வாரும் பணிகள் 

மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

News image
டெல்டா மாவட்டங்களில் முழுவீச்சில் தூர்வாரும் பணிகள்.
Updated On :23 மே 2022, 8:26 am

DIN

மேட்டூர் அணை திறப்பதால், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4,649 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு தூர்வாரும் பணிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,356.44 கிலோமீட்டர் தூரத்திற்கு 170 பணிகள் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மே 30  தேதிக்குள் பணிகள் முடிக்க இருந்த நிலையில், தற்போது மே 24 ஆம் தேதி மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுகிறது. 

தூர்வாரும் பணிகள் திட்டமிட்டப்படி முடிப்பதற்குள், அதாவது முன்கூட்டியே ஆறு நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறப்பதால் தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், முன்கூட்டியே தண்ணீர் திறப்பது மகிழ்ச்சி தான், ஆனால் அதே மகிழ்ச்சி தண்ணீர் கடைமடை வரை சென்றடைய வேண்டும் என்பதே. 

பல இடங்களில் தற்போது தான் பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் வருவதற்குள் இந்த பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு சாத்தியகூறுகள் இல்லை, 50% பணிகளாவது முடிவடைய வேண்டும் என்றால், போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசு முழு கவனம் செலுத்தி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.