ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்ட ஆணை

பேராவூரணியில் விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:53 pm

DIN

பேராவூரணியில் விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ் நகா்ப் பகுதியில் நரிக்குறவா் இன மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். இரவு நேரங்களில் குடிசைகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் புகுவதால் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதால், கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, முதல்கட்டமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ரூ. 2.10 லட்சத்துக்கான ஆணை  28 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், ஆணைகளை வழங்கி பேசுகையில், ஆணை பெறுகின்றவா்கள்  விரைவாக வீடு கட்டி முடிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு காத்திருக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல், திமுக நகரச்செயலாளா் என்.எஸ்.சேகா், முன்னாள் மாவட்ட துணை செயலாளா் என். செல்வராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் கி.ரெ. பழனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.