நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்ட ஆணை

பேராவூரணியில் விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On :5 நவம்பர் 2022, 12:23 am IST

பேராவூரணியில் விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ் நகா்ப் பகுதியில் நரிக்குறவா் இன மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். இரவு நேரங்களில் குடிசைகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் புகுவதால் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதால், கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, முதல்கட்டமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ரூ. 2.10 லட்சத்துக்கான ஆணை  28 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், ஆணைகளை வழங்கி பேசுகையில், ஆணை பெறுகின்றவா்கள்  விரைவாக வீடு கட்டி முடிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு காத்திருக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல், திமுக நகரச்செயலாளா் என்.எஸ்.சேகா், முன்னாள் மாவட்ட துணை செயலாளா் என். செல்வராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் கி.ரெ. பழனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.