தொழிலாளி கொலை: அண்ணன் கைது
கும்பகோணம் அருகே தொழிலாளியைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அவரது அண்ணனைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.


கும்பகோணம் அருகே தொழிலாளியைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அவரது அண்ணனைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் பகுதி புளியம்பேட்டை குருமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் வைரப்பன் (33). சிற்ப தொழிலாளி. இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததால், 2 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டாா்.
இந்நிலையில் வைரப்பன் தானாக தவறி விழுந்து காயமடைந்ததாக வியாழக்கிழமை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைரப்பன் உயிரிழந்தாா்.
வைரப்பன் சாவில் சந்தேகம் இருப்பதாக திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமியின் சித்தப்பாவான கீழக்கொட்டையூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் வைரப்பனை அவரது அண்ணன் வேலப்பன் (39) கட்டையால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வேலப்பனை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...