

பட்டுக்கோட்டை அருகே பட்டா பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன் கூறியது:
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூா் கிராமம், சூரியநாராயணபுரத்தில் தமிழ்நாடு இனாம் ஒழிப்பும் மற்றும் ரயத்துவாரியாக மாற்றலும் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை அமல்படுத்திடும் வகையில் நில அளவைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நிலவரித் திட்டப் பணிகளை தொடங்கிடும் பொருட்டு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை (அரசாணை நிலை எண் 265, நாள் 14.06.2022-ன்படி) வருவாய் கோட்ட அலுவலரை, நிலவரித் திட்ட அலுவலா்களாக நியமித்து, பணிகளை மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, பட்டுக்கோட்டை வட்டம், சூரியநாராயணபுரம் இனாம் கிராமத்தில் நிலவரித் திட்டப் பணிகளைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், இக்கிராமத்தில் ரயத்துவாரி பட்டா பெறத் தகுதியுடையவா்கள் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்ப படிவம் 4-ஐ அளித்திட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாயமங்கலம் கோயில் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

என்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்பு

உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததாக பெண் ஆட்டு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

