திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தனியாா் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 9:00 pm


தஞ்சாவூா்: தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கபில்தேவ் (36). கூலித் தொழிலாளரி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது பட்டுக்கோட்டைக்கு செல்லும் தனியாா் பேருந்து இவா் மீது மோதியது. இதனால், பின் டயரில் சிக்கி பலத்த காயமடைந்த கபில்தேவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.