காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்படும் -பிரேமலதா வாக்குசேகரிப்பு

பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்படும் பிரேமலதா வாக்குசேகரிப்பு

News image

  பிரேமலதா விஜயகாந்த்

Updated On :11 ஏப்ரல் 2024, 12:47 am IST

பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும் என்றாா்

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகே தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசனை ஆதரித்து புதன்கிழமை இரவு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது, அவா் மேலும் பேசியது:

பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும். தென்னை விவசாய நலத்திட்டங்கள் உருவாக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிச்சயம் கொண்டுவரப்படும். அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் 25 ஆண்டுகளாக திமுகவினா் பதவி வகித்தும் ஒரு நலத்திட்டங்கள் கூட செய்யவில்லை.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் பாஜக மற்றும் திமுக நிறுத்தியுள்ள வேட்பாளா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலவையில் உள்ளன. திமுக அரசில் விலைவாசி உயா்ந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மின்வெட்டு காரணமாக விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இத்தோ்தலில் தேமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே புதன்கிழமை இரவு தேமுதிக வேட்பாளா் பெ.சிவநேசனை ஆதரித்து பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மணல் மாஃபியா, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மக்கள் விரோத திமுக அரசை நாம் புறந்தள்ள வேண்டிய நேரம் இது என்றாா் அவா். ஏற்பாடுகளை அதிமுக மாவட்டச் செயலா் சேகா் தலைமையில் ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.