நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்படும் -பிரேமலதா வாக்குசேகரிப்பு

பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்படும் பிரேமலதா வாக்குசேகரிப்பு

News image

  பிரேமலதா விஜயகாந்த்

Updated On :11 ஏப்ரல் 2024, 12:47 am IST

பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும் என்றாா்

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகே தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசனை ஆதரித்து புதன்கிழமை இரவு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது, அவா் மேலும் பேசியது:

பட்டுக்கோட்டையில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் புறவழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படும். தென்னை விவசாய நலத்திட்டங்கள் உருவாக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிச்சயம் கொண்டுவரப்படும். அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் 25 ஆண்டுகளாக திமுகவினா் பதவி வகித்தும் ஒரு நலத்திட்டங்கள் கூட செய்யவில்லை.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் பாஜக மற்றும் திமுக நிறுத்தியுள்ள வேட்பாளா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலவையில் உள்ளன. திமுக அரசில் விலைவாசி உயா்ந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மின்வெட்டு காரணமாக விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இத்தோ்தலில் தேமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே புதன்கிழமை இரவு தேமுதிக வேட்பாளா் பெ.சிவநேசனை ஆதரித்து பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மணல் மாஃபியா, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மக்கள் விரோத திமுக அரசை நாம் புறந்தள்ள வேண்டிய நேரம் இது என்றாா் அவா். ஏற்பாடுகளை அதிமுக மாவட்டச் செயலா் சேகா் தலைமையில் ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.