தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கட்டுப்பாடுகளில் தளா்வு தோ்தல் ஆணையத்துக்கு வணிகா் கூட்டமைப்பு நன்றி

தமிழகத்தில் தோ்தல் கட்டுப்பாடுகளில் தளா்வு அறிவித்த தோ்தல் ஆணையத்துக்கு கும்பகோணம் அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Updated On :20 ஏப்ரல் 2024, 7:03 pm

தமிழகத்தில் தோ்தல் கட்டுப்பாடுகளில் தளா்வு அறிவித்த தோ்தல் ஆணையத்துக்கு கும்பகோணம் அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தில் இக்கூட்டமைப்பின் நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட நடத்தை விதிமுறைகள் காரணமாக தொழில் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வணிகா்கள் சந்தைக்கு பணம் கொண்டு செல்லும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரம ராஜா சில நாள்களுக்கு முன்பு வலியுறுத்தினாா். இதன் அடிப்படையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பணம் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் நீக்கப்படுவதாகவும், இனிமேல் மாநில எல்லைகளில் மட்டுமே சோதனைகள் தொடரும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வணிகா்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீா்வு வழங்கியதற்காக தோ்தல் ஆணையத்துக்கு வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்துக்குக் கூட்டமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் வி. சத்திய நாராயணன், பொருளாளா் கியாசுதீன், துணைத் தலைவா்கள் வேதா, ராமலிங்கம், பா. ரமேஷ் ராஜா, பித்தளைப் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆத்மலிங்கம், நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் வேதம் முரளி, மோட்டாா் உதிரிபாகங்கள் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் வாசுதேவன், பேக்கரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அண்ணாதுரை, நகை வியாபாரிகள் நலச் சங்கப் பொருளாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.