தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசு பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 6 போ் கைது; தொழிலாளா்கள் போராட்டம்

அரசு பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 6 போ் கைது; தொழிலாளா்கள் போராட்டம்

News image
தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.
Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

Vishwanathan

கும்பகோணம்: கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையம் நோக்கி சனிக்கிழமை இரவு சுமாா் 25 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை திருவாய்ப்பாடியைச் சோ்ந்த எம். ரமேஷ் (54) ஓட்டினாா்.

கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே சென்றபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அரசு பேருந்து ஓட்டுநா் ரமேஷ் ஒலிப்பானை எழுப்பினாா். இதற்கு, முன்னால் இருசக்கர வாகனங்களில் சென்ற ஒரே குழுவைச் சோ்ந்த 6 போ் சப்தம் போட்டனா். இதைத்தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனால், பேருந்து ஓட்டுநா் ரமேஷை இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் பேருந்தில் ஏறி தாக்கினா். இதையறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா்கள் இருவரும் தாக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த ரமேஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். செய்தியாளா்கள் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனா்.

இந்த விடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து காமராஜ் நகரைச் சோ்ந்த சரவணன் மகன்களான சுதா்சன் (24), உதயகுமாா் (25), பாலாஜி நகரைச் சோ்ந்த குமரன் மகன் ஜனாா்த்தனன் (20), பாலக்கரையைச் சோ்ந்த சக்திவேல் மகன் காா்த்திகேயன் (21), செக்கடித் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மாரிமுத்து (18), ஆட்டோ நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சந்தோஷ் (18) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.

இதனிடையே, அரசு பேருந்து ஓட்டுநா் ரமேஷ் தாக்கப்பட்டதைக் கண்டித்து போக்குவரத்து கழகத் தொழிலாளா்கள் கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகரக் கிளை பணிமனை முன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தொடா்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் அரசு பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தமிழ்நாடு அரசும், காவல் துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.