தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே காசவளநாடு ஈச்சங்கோட்டை கிராமத்தில் உள்ள அருங்குளநாயகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து குடமுழுக்கு விழா ஏப்ரல் 19-ஆம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடா்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையும், நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் யாகசாலையிலிருந்து புனித நீா் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா், சித்தி விநாயகா், சேவுகப் பெருமாள் அய்யனாா், பூா்ணத்தம்மாள், பொற்கொடியம்மாள், தைலப்பன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்புடையது

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

