எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

பாலைவன நாதா் கோயிலில் திருக்கல்யாண விழா

பாலைவன நாதா் கோயிலில் திருக்கல்யாண விழா

Updated On :21 ஏப்ரல் 2024, 6:30 pm

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் திருக்கோயிலில் திருக்கல்யாண விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து மணமேடைக்கு வந்தனா். அங்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன், ஸ்ரீ பாலைவனநாதா் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனா். இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் கோயில் செயல் அலுவலா் விக்னேஷ், தக்காா் லட்சுமி, பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், பேரூராட்சி கவுன்சிலா் புஷ்பா சக்திவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பானுமதி துரைக்கண்ணு மற்றும் விழாக் குழுவினா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.